Published : 27 Dec 2021 07:29 AM
Last Updated : 27 Dec 2021 07:29 AM
புதுடெல்லி: பருவமெய்திய இஸ்லாமிய பெண் ணுக்கு, தான் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்றும் அப்பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அப் பெண்ணின் முடிவில் தலையிட உரிமை இல்லை என்றும் பஞ்சாப் மற்றும் ஹரி யாணா உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது முஸ்லீம் பெண் ஒருவர், 33 வயதுடைய இந்து ஆணை திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அந்த இளம் தம்பதியின் பாதுகாப்பு கேள்வி குறியானது.
அதைத் தொடர்ந்து அப்பெண் சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ‘‘இஸ்லாமிய விதிப்படி, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பருவமெய்தியதும் அவர்கள் திருமணம் செய்யும் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
அந்த வகையில் 15 வயது முதலே அவர்கள் பெரியவர்களாக கருதப்பட வேண்டும்’’ என்று அப்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். பெண்ணின் பெற்றோர் தரப்பிலும் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பையும் விசாரித்த நீதிபதி ஹர்நரேஷ் சிங் கில், ‘‘பருவமெய்திய இஸ்லாமிய பெண்ணுக்கு, அவர் விரும்பும் யாரையும் திருமணம் செய்யும் உரிமை இருக்கிறது. அந்த பெண்ணின் முடிவில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தலையிட உரிமை இல்லை’’ என்று கூறி, அந்தத் தம்பதிக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லீம் பெண்ணின் திரு மணம் என்பது முஸ்லீம் தனி நபர் சட்டத்துக்கு உட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். டின்ஷா ஃபார்டுன்ஜி முல்லா எழுதிய ‘முகமதிய சட்டத்தின் கொள்கைகள்’ எனும் புத்தகத்தில் 195-வது பிரிவில், ‘இஸ்லாமிய பெண் பருவமெய்தியவுடன் தான் விரும்பும் நபரை திருமணம் செய்யும் தகுதி உடையவளாகிறாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டே நீதிபதி ஹர்நரேஷ் சிங் கில், இவ்வழக்கில் அப்பெண் ணின் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
‘‘மனுதாரர்களின் அச்சத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும். நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கண்களை மூடி இருக்க முடியாது. மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட்டார் என்பதற் காக, அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது’ என்று நீதிபதி கில் குறிப்பிட்டார்.
பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் முடிவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், பருவமெய்தும் முஸ்லீம் பெண் விரும்பியவரை திருமணம் செய்யும் தகுதி உடைய வரா கிறார் என்ற தீர்ப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT