Published : 27 Dec 2021 07:43 AM
Last Updated : 27 Dec 2021 07:43 AM

இமாச்சலில் ரூ.9,500 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல் பிரதேசத்தில் ரூ.9,500 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், அம்மாநிலத் தில் நடைபெறும் உலக முதலீட் டாளர்கள் சந்திப்புக்கும் தலைமை தாங்குகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோடி அடிக்கல் நாட்டும் திட்டங்களில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தள்ளிப் போடப்பட்டு வந்த ரேணுகாஜி அணை திட்டமும் ஒன்று. இமாச்சல் பிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களின் ஒத்துழைப்போடு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.7000 கோடி ஆகும்.

ரூ.1,800 கோடி மதிப்பிலான லுஹ்ரி நீர்மின் திட்டத்துக்கும் ஹமிர்பூர் மாவட்டத்தில் ரூ.680 கோடி மதிப்பிலான தவுலாசித் நீர்மின் திட்டத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இவை தவிர ரூ.2,080 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாவ்ரா குட்டு நீர்மின் நிலையத்தையும் அவர் தொடங்கிவக்கிறார்.

இமாச்சல் பிரதேசத்தில் நடைபெறும் உலக முதலீட் டாளர்கள் சந்திப்பு மூலம் அப்பிராந்தியத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதாக பிரதமர் அலுவலகம் தெரித்துள்ளது.

கவனம் செலுத்தப்படாத வாய்ப்புகளில் மோடி கவனம் செலுத்தி வருகிறார் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிடுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x