Published : 25 Dec 2021 11:09 AM
Last Updated : 25 Dec 2021 11:09 AM

மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஒரே நாளில்  7,189 பேருக்கு பாதிப்பு 

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,189 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 7,189

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,44,01,670

இதுவரை குணமடைந்தோர்: 3,42,23,263

குணமடைந்தோர் விகிதம் 98.39%

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 7,286

கரோனா உயிரிழப்புகள்: 4,79,520

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 387

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 77,032

நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு: 415

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 141.01 கோடி

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x