Published : 24 Mar 2016 09:48 AM
Last Updated : 24 Mar 2016 09:48 AM
குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பயணம் செய்யும் ‘ஏர் இந்தியா ஒன்’ விமான ஊழியர்களுக்கு விரைவில் காதி ஆடைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
உள்நாட்டுத் துணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி) கீழ் செயல்படும் காதி கிராமோத்யோக் பவனுக்கு துணி ஆர்டர் தரப்பட்டுள்ளது.
இதன்படி விமான பெண் ஊழியர்களுக்கு பட்டுப் புடவை யும் ஆண் ஊழியர்களுக்கு ஜோத்புரி கோட், பேண்ட், கோட் உடன் அணியும் மேலாடை ஆகிய வற்றுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கே.வி.ஐ.சி அதிகாரி ஒருவர் கூறும்போது “இளைஞர்களிடையே காதி துணி களை பிரபலப்படுத்துவதற்காக, விமான ஊழியர்களுக்கு காதி ஆடைகள் அறிமுகம் செய்கி றோம். இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT