Last Updated : 21 Dec, 2021 10:42 AM

 

Published : 21 Dec 2021 10:42 AM
Last Updated : 21 Dec 2021 10:42 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு கரோனா உறுதி: 453 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 453 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 5,326.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,47,52,164.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 8,043.

இதுவரை குணமடைந்தோர்: 3,41,95,060.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 453.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,78,007.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 79,097. இது கடந்த 572 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,38,34,78,181 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x