Published : 14 Dec 2021 12:52 PM
Last Updated : 14 Dec 2021 12:52 PM

பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வாரணாசியில் ஆலோசனை

வாரணாசி: வாரணாசியில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து வாரணாசியில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, பாஜக ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, அமைப்புச் செயலாளர் சந்தோஷ் மற்றும் கட்சியின் உ.பி., காசி மண்டலப் பிரிவுகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் தங்கள் மாநிலங்களில் ஆட்சி நிர்வாகம், கட்சி வளர்ச்சி குறித்து மாநில முதல்வர்கள் விளக்கமாக எடுத்துக் கூறினர்.

கூட்டத்திற்கு பின்பு, துணை முதல்வர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு முதல்வர்கள் செல்ல உள்ளனர். இதுமட்டுமின்றி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர்கோயிலுக்கு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் டிசம்பர் 15ஆம் தேதி செல்ல உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x