Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

இந்து வழிபாட்டுத் தலங்களின் பெருமையை பிரதமர் மீட்டுள்ளார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

அகமதாபாத்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காட்வா படிதார் சமூகத்தினரின் இஷ்ட தெய்வமான மா உமியாவுக்கு 74 ஆயிரம் சதுர அடி நிலத்தில் ரூ.1,500 கோடி செலவில் கோயில் மற்றும் பிற கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இக்கோயிலில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

இந்து சமூகத்தினரின் வழிபாட்டு தலங்கள் பல ஆண்டுகளாக அவமானப்படுத்தப் பட்டு வந்தன. அவற்றின் பெருமையை மீட்டெடுப்பது குறித்து, 2014-ல் மோடி அரசு பதவியேற்கும் வரை யாரும் முயற்சி எடுக்கவில்லை. இத்தகைய தலங்களின் புனர மைப்புக்காக பிரதமர் மோடி அரசு அச்சமின்றி செயல்படுகிறது.

முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியில் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில், பிரதமர் மோடியின் கரங்களால் புதுப் பிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் உருக்குலைந்த கேதார்நாத் கோயிலில் ஆதி சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் திறந்து வைத்து, இந்துக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தார்.

முன்பெல்லாம் கோயில் களுக்குச் செல்ல மக்கள் வெட்கப்பட்டார்கள். ஆனால் மோடி அரசுடன் தற்போது புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x