Last Updated : 10 Dec, 2021 10:25 PM

 

Published : 10 Dec 2021 10:25 PM
Last Updated : 10 Dec 2021 10:25 PM

எஃகு, இரும்பு விலை உயர்வுக்கு காரணம் என்ன?- மக்களவையில் மத்திய அமைச்சர் ராம்சந்தர பிரசாத் சிங் விளக்கம்

புதுடெல்லி

எஃகு மற்றும் இரும்பு விலை உயர்விற்கு காரணம் என்ன என மக்களவையில் இன்று திமுக எம்.பியான கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய எஃகுத்துறை அமைச்சரான ராம்சந்தர பிரசாத் சிங் விளக்கமானப் பதிலளித்தார்.

அதில், கடந்த ஐந்தாண்டுகளில் (சராசரி நவம்பர் மாதம்) உள்கட்டமைப்புத் துறையில் பயன்படுத்தப்பட்ட இரும்பு மற்றும் எஃகு முக்கிய பொருட்களின் சராசரி சந்தை விலை 115% வரை அதிகரித்துள்ளது.

இரும்புத் தாது மற்றும் எஃகு கிடைப்பதை அதிகரிப்பதற்கும், அவற்றை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சுரங்கம் மற்றும் கனிமக் கொள்கை சீர்திருத்தங்கள், இரும்புத் தாது உற்பத்தியை மேம்படுத்துதல், கைவிடப்பட்ட வேலைகளை முன்கூட்டியே செயல்படுத்துதல் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால், சுரங்கப்பணியும், எஃகு உற்பத்தி அதிகரிக்கின்றன.

மத்திய பட்ஜெட் 2021-22 இல், உலோகம், உலோகக் கலவை மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களின் செமிஸ், பிளாட் மற்றும் லாங் தயாரிப்புகள் மீதான சுங்க வரி ஒரே மாதிரியாக 7.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், உலோக மறுசுழற்சி செய்பவர்களுக்கு நிவாரணம் வழங்க, பெரும்பாலும் MSMEகள், ஸ்டீல் ஸ்கிராப்பில் BCD க்கு 2022 மார்ச் 31 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சில எஃகு தயாரிப்புகளில் ADD மற்றும் CVD ஆகியவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

எஃகு என்பது ஒரு கட்டுப்பாடு நீக்கப்பட்ட துறை இதில் அரசாங்கத்தின் பங்கு ஒரளவு மட்டுமே உள்ளது. எஃகு ஆலைகளை மேம்படுத்துவது தொடர்பான முடிவு தொழில் நுட்ப-வணிகக் கருத்தில் அடிப்படையில் தனிப்பட்ட நிறுவனங்களால் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x