Published : 08 Dec 2021 03:58 PM
Last Updated : 08 Dec 2021 03:58 PM

நீலகிரி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: யாரெல்லாம் பயணித்தார்கள்? விவரம் என்ன?

குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் | படம்: ஏஎன்ஐ.

குன்னூர்

நீலிகிரி மாவட்டம், குன்னூர் அருகே இன்று விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் மொத்தம் 14 பேர் பயணித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை சூளூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.

இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீலிகரியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில்தான் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்ததாகவும், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய விமானப் படை ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

1. தலைமைத் தளபதி பிபின் ராவத்
2. பிபன் ராவத் மனைவி மதுலிகா ராவத்
3. பிரிகேடியர் எல்எஸ் லிட்டர், எஸ்எம், விஎஸ்எம்
4. லெப்டினல் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
5. என்.கே.குருஷேவக் சிங்
6. என்.கே.ஜிதேந்திர குமார்
7. விவேக் குமார்
8. எஸ்.வி.சாய் தேஜா
9. ஹாவ் சப்தல் மற்றும் 5 விமானிகள், பணியாளர்கள் இருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x