Published : 28 Mar 2016 10:03 AM
Last Updated : 28 Mar 2016 10:03 AM

மோடி, ஜேட்லி போஸ்டர் மீது முட்டை, கருப்பு மை வீச்சு: உ.பி.யில் 150 பேர் மீது வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உருவம் பதித்த பதாகைகள் மீது முட்டைகள் மற்றும் கருப்பு மையை வீசியதாக 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.

மீரடில் கடந்த 23-ம் தேதி பங்கு சந்தை வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் பங் கேற்ற பலர் நகரின் பல்வேறு இடங் களில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச் சர் அருண் ஜேட்லியின் உருவம் பதித்த பதாகைகள் மீது முட்டை கள் மற்றும் கருப்பு மையை வீசி யுள்ளனர். இதையடுத்து, ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற தங்கநகை வர்த்தகர்கள் மற்றும் தொழிலதி பர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் ராஜ்குமார் பரத்வாஜ் உள்பட 150 பேர் மீது உள்ளூர் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே சமயம் தங்க நகை வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதற்கும் தங்களது சங்கத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நிரபராதிகள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, குற்றம்புரிந்த விஷமிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x