Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்த 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்த விமானத்தில் பயணித்த நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டது. தற்போது அந்த முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் வந்த 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ஜெய்ப்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி நரோத்தம் சர்மா கூறும்போது, “தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதைக் கண்டறிந்தோம். இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த அவர்களது குடும்பத்தார், உறவினர்கள் அனைவரையும் தனிமையில் வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட 4 பேரில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x