Published : 01 Dec 2021 01:20 PM
Last Updated : 01 Dec 2021 01:20 PM

காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுவடைகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிசம்பர் 2-ம் தேதியான நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் 2-ம் தேதியான நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையை டிசம்பர் 4-ம் தேதி காலைக்குள் சென்றடைய வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக டிசம்பர் 1-2 தேதிகளில் அந்தமான் &நிகோபார் தீவுகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்; டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் வடக்குக் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாக கன மழை பெய்யும்.

டிசம்பர் 3-ம் தேி முதல் 5-ம் தேதி வரை பரவலாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப்பகுதிகளில் மழை பெய்யும்.

டிசம்பர் 4 ஆம் தேதி கடலோர ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திராவில் குறிப்பிட்டப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x