Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது: இஸ்ரேலின் அதிநவீன உளவு விமானம்

ஹெரோன் உளவு விமானம்.

புதுடெல்லி

இஸ்ரேலின் அதிநவீன ஹெரோன் உளவு விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.

ஆளில்லா உளவு விமானங்களை தயாரிப்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னோடிகளாக உள்ளன. இந்திய ராணுவத்தில் இஸ்ரேலின் ஹெரோன் உளவு விமானங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இவை லடாக் எல்லையில் உளவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த சூழலில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஹெரோன் உளவு விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது. இதன்படி 4 ஹெரோன்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சீனராணுவ அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இவை லடாக் எல்லையில் பறக்க விடப்படவுள்ளன.

நவீன ஹெரோன் உளவு விமானங்கள் 35,000 அடி உயரத்தில் தொடர்ந்து 52 மணி நேரம் பறக்கும் தன்மை கொண்டவை. தற்போது இவை உளவு பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. நாளடவையில் இந்த உளவு விமானங்கள் மூலம் தாக்குதலும் நடத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் பிரிடேட்டர் வகையை சேர்ந்த 2 உளவு விமானங்களை இந்திய கடற்படை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது. இந்த வகையை சேர்ந்த 30 உளவு விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க உளவு விமானங்கள் முப்படைகளிலும் சேர்க்கப்படும் என்று பாதுகாப்புத் துறை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x