Published : 29 Nov 2021 03:05 AM
Last Updated : 29 Nov 2021 03:05 AM
தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமைக்ரான் வகை வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று இந்தியமருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆரின் தொற்று நோயியல், தொற்று நோய்கள் துறை தலைவர் சாமிரான்பான்டா கூறியதாவது: இந்த புதியவைரஸில் கண்டறியப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள் கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. இது ஆபத்தானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லது கடுமையான நோயை ஏற்படுத்தும் அவசியமும் இல்லை என்று தெரிகிறது. தற்போது வரை அத்தகைய செய்திகளோ, தரவுகளோ எதுவும் வரவில்லை. இந்த புதிய வகை வைரஸ் பாதிப்புகளின் வீரியம் தொடர்பான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைவரும் 2 டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.
கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வரும் நிலையில் அதுஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு தொற்றுவது என்பது பழைய முறையிலேயே உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றால் இதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை
அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கு மத்திய சுகா தாரத் துறை நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கவலை தரும் உருமாற்ற கரோனா வைரஸான ஓமைக்ரான் பாதிப்புள்ள நாடுகள் குறித்த பட்டியலை ஏற்கெனவே மத்திய அரசு அடையாளம் கண்டு அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து நமது நாட்டுக்குள் வரும்சர்வதேச பயணிகளை கூடுதல்விழிப்புடன், தடுப்பு நடவடிக்கைகளுடன் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துதல் வேண்டும்.
சில மாநிலங்களில் கரோனாபரிசோதனை அளவு குறைந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT