Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM

சீக்கியர் பற்றி சர்ச்சை கருத்து: நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி பேரவை குழு சம்மன்

புதுடெல்லி

சீக்கியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க டிசம்பர் 6-ம் தேதி ஆஜராகுமாறு நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி சட்டப்பேரவைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கடுமையான போராட்டங்கள் நடத்தினர்.இப்போது சட்டங்கள் வாபஸ்பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்திய சீக்கியர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் இவர்களை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது உயிரையே விலையாகக் கொடுத்து கொசுக்களைப் போலநசுக்கினார் என்றும் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் கடுமையாக விமர்சித்திருந்தார்.கங்கனா ரனாவத்தின் இந்தக் கருத்து சீக்கியர்களை அவமதிக்கும் வகையிலும் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பதாக சீக்கிய சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அகாலிதளம் கட்சியின் சார்பில் கங்கனா மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து டிசம்பர் 6-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டெல்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ்சத்தா தலைமையிலான அமைதி மற்றும் மதநல்லிணக்கக் குழுநடிகை கங்கனாவுக்கு சம்மன்அனுப்பி உள்ளது. கங்கனாவின் கருத்து தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும் பல்வேறு சமூகத்தவரிடையே மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்ட இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பேரவைக் குழு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x