Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

‘அமேசான்’ மூலம் கஞ்சா கடத்தல்: விசாகப்பட்டினத்தில் 4 பேர் கைது

விசாகப்பட்டினம்: மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியரில் உள்ள ஒரு ஓட்டலில் கஞ்சா பொட்டலங்களை கடந்த 13-ம் தேதி போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ம.பி. போலீஸார் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ‘அமேசான்’ பார்சல் சர்வீஸ் மூலம் கறிவேப்பிலை பொடி, ஆயுர்வேத பவுடர் ஆகிய பெயர்களில் கஞ்சா கடத்துவது தெரிய வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ம.பி.யில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, ம.பி. போலீஸார் நேற்று விசாகப்பட்டினம் வந்தனர். ஆந்திர போலீஸாரின் உதவியுடன் நிவாஸ் எனும் கஞ்சா விநியோகம் செய்யும் நபர், விசாகப்பட்டினத்தில் ‘அமேசான்’ நிறுவனத்தில் ’டெலிவரி பாய்’களாக பணியாற்றும் குமாரசாமி, கிருஷ்ணம் ராஜு, வெங்கட ரமணா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை ம.பி. போலீஸார் குவாலியருக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x