2022-ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு 2.95 கோடி வீடுகள்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

2022-ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு 2.95 கோடி வீடுகள்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் வீடில்லாத அல்லது தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் 2.95 கோடி பேருக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது மிகவும் முக்கியமான முடிவு. நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2022-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, சமவெளி பகுதியில் வசிப்பவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு ரூ.1.2 லட்சமும், மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1.3 லட்சமும் அரசு நிதியுதவி வழங்கும்.

இந்தத் திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். இதன்படி முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக அரசு ரூ.82 ஆயிரம் கோடியை ஒதுக்கும். இதில் ரூ.65 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். மீதமுள்ள தொகை நபார்டு வங்கி வழங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in