Last Updated : 24 Nov, 2021 03:07 AM

 

Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

கர்நாடகாவுக்கு மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கும்: பிரதமர் மோடி உறுதி அளித்ததாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல்

கர்நாடகாவில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர்நரேந்திர மோடி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை யிடம் உறுதியளித்தார்.

கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் காவிரி, கிருஷ்ணாஉள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, குடகு, ஷிமோகா, மங்களூரு உட்பட பெரும்பாலான இடங்களில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

கோலார், சிக்கப்பள்ளாப்பூர், மண்டியா, ஹாசன் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, நிலக்கடலை, தக்காளி, காய்கறி பயிர்கள் முழுவதுமாக சேதம‌டைந்துள்ளன. முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

பின்னர் பசவராஜ் பொம்மைசெய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மழை வெள்ள சேதம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். நான் வெள்ள பாதிப்பு குறித்து விரிவாக அவரிடம் எடுத்துரைத்தேன். அதனை கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு மத்தியஅரசின் சார்பில் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கு வதாகவும் உறுதியளித்தார். நவம்பரில் மட்டும் மழை வெள்ளத்துக்கு 27 பேர் உயிரிழந் துள்ளனர். 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், ராகி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x