Published : 22 Nov 2021 08:13 PM
Last Updated : 22 Nov 2021 08:13 PM

 25-ம் தேதி முதல் மீண்டும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்ககடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த சில நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக 25-ம் தேதி முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கீழ் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது.

இது அடுத்த 4-5 நாட்களில்மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை:

கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே மற்றும் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மற்றும் மிகவும் பரவலாக மழை பெய்யும்.

அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யும்.

அடுத்த 5 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, கேரளா & மாஹேயில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேசமயம் அடுத்த 2 நாட்களில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மற்றும் வடக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் குளிர் அலை வீசுவதற்கு மிகவும் சாத்தியம் உள்ளது. அதன் பிறகு குறையும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x