Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் 3 நாள் நடைபெற்ற அனைத்து யூனியன் பிரதேசம், மாநில போலீஸ் டிஜிபிக்களின் மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, டிஜிபிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று காலை பிரதமர் மோடியை, முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.
பின்னர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
நமது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து, சூரியனை உதிக்கச் செய்வோம். வானத்தை விட உயர வேண்டும், புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியுடன் நாம் புறப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “போலீஸ் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நான் பங்கேற்றேன். இது ஒரு முக்கியமான மாநாடாக அமைந்தது. இதில் நமது காவல் துறையை நவீனமயமாக்குவது குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தியுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT