Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

பாஜகவுக்கு எதிராக உத்தராகண்ட் மாநில தேர்தலில் சார்தாம் பூஜாரிகள் சங்கம் போட்டி

டேராடூன்

உத்தராகண்ட் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 15 இடங்களில் போட்டியிட போவதாக சார்தாம் கோயில் பூஜாரிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

உத்தராகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி,யமுனோத்ரி ஆகிய 4 கோயில்கள்சார்தாம் என்று அழைக்கப்படு கின்றன. இந்தக் கோயில்களுடன் தொடர்புடைய 51 கோயில்களை நிர்வகிப்பதற்கான தேவஸ்தான வாரிய சட்டம் 2 ஆண்டுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேவஸ்தான வாரியம் அமைக்க உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சார்தாம் கோயில் பூஜாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தேவஸ்தான வாரியம் அமைப்பதால் கோயில்களில் தங்கள் பாரம்பரியமான உரிமை பறிக்கப்படுகிறது. எனவே, கோயில் வாரியத்தை திரும்ப பெறவேண்டும் என்று பூஜாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், மாநிலத்தில் ஆளும்பாஜக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்காத நிலையில் சில மாதங்களில் நடக்க உள்ள உத்தராகண்ட் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் பாஜகவை எதிர்த்துப் பிரசாரம் செய்ய போவதாகவும் பூஜாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ள னர். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது பேரவையை முற்றுகையிட போவதாகவும் பூஜாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணகாந்த் கோட்டியால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x