Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
ஸ்ரீவாரி தாதா என்ற பக்தர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் தினசரி சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடைபெற வில்லை. அதை சரிசெய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதைஎதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கோயில்களில் நடைபெறும் தினசரி சடங்குகள் மற்றும் சேவைகள் விவகாரத்தில் அரச மைப்பு சட்டத்தின் கீழ் நிறுவப் பட்ட நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 226 மற்றும் 32-வது பிரிவுகளின்படி நீதிமன்றங்களின் எல்லை வரையறுக்கப்பட்டது. கோயில்களில் நடைபெறும் சடங்குகள் சரியா, தவறா என்பது குறித்து கீழமை நீதிமன்றங்களில் சிவில் வழக்கு தொடுக்கலாம்.
தேங்காய் உடைப்பது எப்படி?
கோயில்களில் வழிபடும் போது தேங்காயை எப்படி உடைக்க வேண்டும் அல்லது பூஜை மற்றும் சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பார்ப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை தொடர் பாக 8 வாரத்துக்குள் திருப்பதி திருமலை தேவஸ்தானம் பதில் அளிக்க வேண்டும் என உத்தர விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT