Last Updated : 17 Nov, 2021 10:21 AM

 

Published : 17 Nov 2021 10:21 AM
Last Updated : 17 Nov 2021 10:21 AM

இந்தியாவில் 10,197 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 301 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய தொற்று பாதிப்பை விட 15% என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 10,197. இதில் கேரளாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5516.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,44,66,598.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 12,134.

இதுவரை குணமடைந்தோர்: 3,38,38,185.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.28% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 301. கேரளாவில் மட்டும் 39 பேர் இறந்தனர்.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,64,153..

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,28,555. இது கடந்த 527 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.96% ஆக உள்ளது. இத கடந்த 54 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 0.82% ஆக உள்ளது. இத கடந்த 44 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,13,68,79,685 கோடி. நேற்று ஒரே நாளில் 67,82,042 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x