Published : 25 Mar 2016 09:42 AM
Last Updated : 25 Mar 2016 09:42 AM
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத் தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் நேற்று ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், இளைஞர்கள் மட்டு மல்லாது அரசியல் கட்சியினரும் வண்ணங்களை பூசிக்கொண்டு இந்தத் திருவிழாவைக் கொண் டாடினர்.
டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தி லும் ஹோலி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த சோனியா, ராகுலுக்கு மகளிர் அணியினர் மலர் கொத்துகளைக் கொடுத்து வரவேற்றனர். தொண்டர் கள் அவர்கள் மீது வண்ணப் பொடிகளை தூவினர்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், அஜய் மக்கான், ரந்தீப் சுர்ஜிவாலா, சந்தீப் தீட்சித் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகை யில் இந்த வண்ணத் திருவிழா அமைந்துள்ளது. பன்முகத்தன்மை யின் அடையாளமாகவும் இது விளங்குகிறது” என்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்ததால், நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் (பெரும் பான்மை இனத்தவர் உட்பட) ஈர்ப்பதில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தி வருகிறது.
கேஜ்ரிவால் வாழ்த்து
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியோ உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினரும் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
இதுகுறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது குடும் பத்தினர், அமைச்சர்கள், எம்எல்ஏக் கள், அதிகாரிகள், ஆட்டோ ஓட்டு நர்கள் உள்ளிட்டோருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினேன். அனைவருக்கும் ஹோலி வாழ்த்து கள்” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT