Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

பாகிஸ்தானிலிருந்து கடத்தி வந்த ரூ.600 கோடி ஹெராயின் குஜராத்தில் பறிமுதல்

குஜராத்தில் மோர்பி மாவட்டம் ஜின்ஜூடா கிராமத்தில்போதைப் பொருள் பதுக்கப்பட்டிருப்பதாக தீவிரவாத எதிர்ப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சோதனை மேற்கொண்ட போலீஸார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு ரூ.600 கோடி என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் இருந்து ஜாகிர் பஷீர் பலோச் என்பவர் படகு மூலம் கடந்த மாதம் கடைசி வாரத்தில் அனுப்பிய இந்த போதைப் பொருளை முக்தார் ஹூசைன், குலாம் உமர் ஆகியோர் பெற்றுக் கொண்டு துவாரகா மாவட்டத்தில் உள்ள சாயா கிராமத்தில் பதுக்கியதும் பின்னர் அதை மோர்பி மாவட்டத்துக்கு கொண்டு வந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதை ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x