Last Updated : 13 Nov, 2021 03:01 PM

 

Published : 13 Nov 2021 03:01 PM
Last Updated : 13 Nov 2021 03:01 PM

மணிப்பூரில் ராணுவ அதிகாரி, குடும்பத்தினர், வீரர்கள் 6 பேர் பலி

மணிப்பூரில் ராணுவ அதிகாரி, குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேருமே பலியாகினர்.

மணிப்பூரில் அண்மைக் காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. மணிப்பூர் மியான்மர் எல்லையில் சூராசந்த்பூர் மாவட்டத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கர்னல் ரேங்கில் உள்ள அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகன் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற அசாம் ரைஃபில்ஸ் படை வீரர்கள் என 6 பேருமே இந்தத் தாக்குதல் படுகொலையாகினர்.

இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x