Last Updated : 12 Nov, 2021 11:07 AM

 

Published : 12 Nov 2021 11:07 AM
Last Updated : 12 Nov 2021 11:07 AM

இந்தியாவில் 12,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 501 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 4.3% குறைவு.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 12,516.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,44,14,186​​​​​​​.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 13,155​​​​​​​.

இதுவரை குணமடைந்தோர்: 3,38,14,080.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.26​​​​​​​% என்றளவில் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 501.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,62,690.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,37,416. இது கடந்த 267 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.10% ஆக உள்ளது. இத கடந்த 49 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.07% ஆக உள்ளது. இத கடந்த 37 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,10,79,51,225 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 53,81,889 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x