Published : 27 Mar 2016 09:47 AM
Last Updated : 27 Mar 2016 09:47 AM

குழந்தைகளை பாதுகாக்க ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டம்

குழந்தைகளுக்கான ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் வயிற்றுப்போக்கினால் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 80 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகின்றனர். இதை கட்டுப்படுத்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் ரோட்டோ வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய அளவிலான ரோட்டோ வைரஸ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நேற்று தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 2.7 கோடி குழந்தை களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x