Published : 30 Mar 2016 08:37 AM
Last Updated : 30 Mar 2016 08:37 AM

நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை

பெங்களூருவில் உள்ள எஸ்.கே.கார்டனைச் சேர்ந்தவர் அவினாஷ் ஜோனாதன்(23). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அங்குள்ள கடையில் இருந்த தொலைக்காட்சியில் தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜான் கென்னடி (24) தனது நாயுடன் அங்கு வந்துள்ளார்.

அப்போது நாய் குரைத்துள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவினாஷ் ஜான் கென்னடியை தாக்கியுள்ளார். அங்கிருந்து வீட்டுக்கு சென்ற ஜான் கென்னடி தனது நண்பர்களை அழைத்து வந்து, மீண்டும் சண்டையிட்டுள் ளார். இரு குழுவினரும் மோதிக் கொண்ட போது, ஜான் கென்னடி பீர் பாட்டிலை உடைத்து அவினாஷை தாக்கியதுடன், உடைந்த பாட்டி லால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவினாஷ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஜே.சி.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜான் கென்னடியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x