Published : 03 Nov 2021 08:00 PM
Last Updated : 03 Nov 2021 08:00 PM

இந்த நாடே உங்களுடன் உள்ளது: ஷாருக்கானுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கடிதம்

இந்த நாடே உங்களுடன் உள்ளது என்று ஷாருக்கானுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து மும்பை சிறையிலிருந்து அவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.

மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23), அவரது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்தனர்.

இதையடுத்து, ஆர்யன்கான் மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 28-ம் தேதி ஆர்யன் உட்பட மூவருக்கு ஜாமீன் வழங்கியது. எனினும், ஜாமீன் தொடர்பான விரிவான உத்தரவை 29-ம் தேதி நீதிபதி பிறப்பித்தார்.

அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமைதோறும் காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும்.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது. ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் மதிப்பிலான சொந்த பத்திரம்மற்றும் இதே தொகைக்கு நிகரானபிணை பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்யன் கான் விவகாரத்தில், ஷாருக்கானுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இந்த நாடே உங்களுடன் உள்ளது என்று ஷாருக்கான் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x