Last Updated : 01 Nov, 2021 03:45 PM

 

Published : 01 Nov 2021 03:45 PM
Last Updated : 01 Nov 2021 03:45 PM

தொடர்ந்து 4-வது மாதம்: அக்டோபரிலும் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்வு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | கோப்புப்படம்

புதுடெல்லி 

அக்டோபர் மாதத்திலும் சரக்கு மற்றும் சேவை வரி ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4-வது மாதமாக வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

'2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 127 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து 4-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் ஜிஎஸ்டி வரி வருவாயைவிட 24 சதவீதம் கூடுதலாகவும், 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட 36 சதவீதமும் கூடுதலாக இந்த ஆண்டு வரி வசூலாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 5 மாதங்களில் அக்டோபர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வரிதான் 2-வது அதிகபட்சமாகும். ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.41 லட்சம் கோடி எட்டியது. ஜூலையில் ரூ.1.16 லட்சம் கோடியும், ஆகஸ்டில் ரூ.1.12 லட்சம் கோடியும், செப்டம்பரில் ரூ.1.17 லட்சம் கோடியும் வசூலாகியது.

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 127 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.23 ஆயிரத்து 861 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.30 ஆயிரத்து 421 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.67 ஆயிரத்து 361 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.8 ஆயிரத்து 484 கோடி கிடைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக இருக்கிறது. இது முதல் காலாண்டில் சராசரியாக ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. முதல் காலாண்டை விட 2-வது காலாண்டில் சராசரி வருவாய் 5 சதவீதம் அதிகரித்தது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x