Last Updated : 30 Oct, 2021 10:56 AM

 

Published : 30 Oct 2021 10:56 AM
Last Updated : 30 Oct 2021 10:56 AM

இந்தியாவில் புதிதாக மேலும் 14,313 பேருக்கு கரோனா தொற்று: 549 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட 11% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 14,313. இதில் கேரளாவில் மட்டும் 7,772 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,59,700.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 13,543.

இதுவரை குணமடைந்தோர்: 3,36,41,175.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.20% என்றளவில் உள்ளது. இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 549. இதில் கேரளாவில் மட்டும் 86 பேர் உயிரிழந்தனர்.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,97,103.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,61,555.

கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 98.19 என்றளவில் உள்ளது.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.18%% ஆக உள்ளது. இத கடந்த 35 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.22% ஆக உள்ளது. இத கடந்த 30 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 105.43 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x