ஏப்ரல் 2-ல் ஆஜராக மல்லையாவுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

ஏப்ரல் 2-ல் ஆஜராக மல்லையாவுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

Published on

ஐடிபிஐ வங்கியிடம் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகும்படி அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

முன்னதாக, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையா இன்று (மார்ச் 18) நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், ஏப்ரல் வரை கால அவகாசம் வேண்டும் என்று விஜய் மல்லையா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஐடிபிஐ வங்கியிடம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகும்படி மல்லையாவுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in