Last Updated : 28 Oct, 2021 10:31 AM

 

Published : 28 Oct 2021 10:31 AM
Last Updated : 28 Oct 2021 10:31 AM

இந்தியாவில் புதிதாக மேலும் 16,156 பேருக்கு கரோனா தொற்று: 733 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 733 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 16,156. இதில் கேரளாவில் மட்டும் 9,445 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,31,809.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 17,095.

இதுவரை குணமடைந்தோர்: 3,36,14,434.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.20% என்றளவில் உள்ளது. இது கடந்த மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 733. இதில் கேரளாவில் மட்டும் 93 பேர் உயிரிழந்தனர்.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,56,386.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,60,989. இது கடந்த 243 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 1.19% ஆக உள்ளது. இத கடந்த 34 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 1.25% ஆக உள்ளது. இத கடந்த 24 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,04,02,34,831 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,09,254 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x