இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு கடந்த 238 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவு: புதிதாக 12,428 பேருக்கு தொற்று

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு கடந்த 238 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவு: புதிதாக 12,428 பேருக்கு தொற்று
Updated on
1 min read

இந்தியாவில் தொடர்ந்து 3வது நாளாக அன்றாட கரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதித்தாக 12,428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 238 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 12,428. இதில் கேரளாவில் மட்டும் 6,664 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,41,87,896.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 15,951.

இதுவரை குணமடைந்தோர்: 3,35,83,318.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 356. இதில் கேரளாவில் 53 பேர் உயிரிழப்பு.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4.55,068.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,63,816. இது கடந்த 241 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 102.94 கோடி பேர். கடந்த 24 மணி நேரத்தில், 64,75,733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,67,86,842 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.17% ஆக அதிகரித்துள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதன் அளவீடு.

வாரந்திர பாசிடிவிட்டி ரேட் 1.24% ஆக உள்ளது. தினசரி பாசிடிவிட்டி ரேட் 1.10% ஆக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in