Published : 15 Mar 2016 09:27 AM
Last Updated : 15 Mar 2016 09:27 AM
தெலங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில நிதியமைச்சர் ஈடல ராஜேந்தர் 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் டில் பாசன நீர் திட்டத்துக்காக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ரூ.3,718 கோடிக்கு வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சுகாதார துறை மேம்பாட்டுக்காக ரூ.5,967 கோடியும், தாய் சேய் நலத்துறைக்காக ரூ.1,553 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது.
இதே போல் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கும் நோக்கில் சாலை மற்றும் கட்டிட துறை மேம்பாட்டுக்காக ரூ.3,333 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இந்த நிதியாண்டில் 4 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கவும் திட்டம் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ரூ.200 கோடியும், ஹைதராபாத் நகரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.225 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT