Published : 28 Jun 2014 12:58 PM
Last Updated : 28 Jun 2014 12:58 PM

கெயில் விபத்து: பலி எண்ணிக்கை 16-ஆக அதிகரிப்பு

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எரிவாயு பைப் லைன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று சம்பவ இடத்திலேயே உடல் கருகி 13 பேர் பலியாகினர். இருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியாகினர்.

இந்நிலையில் இன்று காலை காகிநாடாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி பலியானது. பலி எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 6 பேர் கவலைக்கிடம்:

கிழக்கு கோதாவரி காவல்துறை கண்காணிப்பாள விஜயகுமார் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்: தீக்காயங்களுடன் 20 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேர் 80% அதிகமாக தீக்காயங்கள் அடைந்துள்ளனர். அவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x