Published : 23 Oct 2021 03:50 PM
Last Updated : 23 Oct 2021 03:50 PM

கோவிட்-19 தடுப்பூசி; 101.30 கோடியைக் கடந்தது

புதுடெல்லி

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 101.30 கோடியைக் கடந்தது

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 68,48,417 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 101.30 கோடியைக் (1,01,30,28,411) கடந்தது. 1,00,29,602 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,677 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,35,32,126 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.16 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 118 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. 233 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

நாட்டில் கோவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்து தற்போது 1,73,728 ஆக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.51 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,64,681 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 59.84 கோடி கொவிட் பரிசோதனைகள் (59,84,31,162) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 120 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.24 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று உறுதி தற்போது விகிதம் 1.20 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 137 நாட்களாக 5 சதவீதத்திற்குக் கீழே 54 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x