Published : 18 Mar 2016 03:39 PM
Last Updated : 18 Mar 2016 03:39 PM

இந்தியாவிலேயே மிகவும் சுத்தமானது சூரத் ரயில் நிலையம்: கருத்து கணிப்பில் தகவல்

இந்தியாவிலேயே மிகவும் சுத்தமான ரயில் நிலையம், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரயில் நிலையம் என ஐஆர்சிடிசி நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பல்வேறு ரயில் நிலையங்களிலும் பயணிகளிடமும் ஐஆர்சிடிசி கருத்து கேட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1.34 லட்சம் பயணிகளிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தூய்மை தொடர்பாக 40 அம்சங்கள் குறித்து அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், வருமான ரீதியாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதாவது ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ-1 என்ற பிரிவின் கீழும் ரூ.6 கோடி முதல் ரூ.50 கோடி வரை வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்கள் ஏ பிரிவின் கீழும் பட்டியலிடப்பட்டன.

இந்த அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ஏ-1 பிரிவில் இந்தியாவிலேயே மிகவும் சுத்தமானதாக குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரயில் நிலையம் தேர்வாகியுள்ளது. 2-வது இடத்தில் ராஜ்கோட் ரயில் நிலையமும்; மூன்றாவது இடத்தில் பிலாஸ்பூர் ரயில் நிலையமும் ஈடுபட்டுள்ளன. 75 ரயில் நிலையங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையம் 65-வது இடத்தில் அதாவது மிகவும் அசுத்தமானது என்ற இடத்தில் இருக்கிறது.

ஏ- பிரிவில், பஞ்சாப் மாநிலம் பீஸ் ரயில் நிலையம் சுத்தமான ரயில் நிலைய பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 5-வது இடத்தில் தமிழகத்தின் கும்பகோணம் ரயில் நிலையம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x