Published : 18 Oct 2021 04:41 PM
Last Updated : 18 Oct 2021 04:41 PM

கரோனா தடுப்பூசி: உத்தரகாண்ட் மாநிலம் சாதனை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி

18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் உத்தராகண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் ட்விட்டர் தகவலுக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிலிளில் தெரிவித்துள்ளதாவது;

“தேவ்பூமி மக்களுக்கு வாழ்த்துகள். கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உத்தராகண்டின் சாதனை மிக முக்கியமானது. உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மக்களின் உதவியோடு இத்திட்டம் வெற்றிப் பெறும். பங்களிப்பு அவசியம்” எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x