Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

துர்கா பூஜை விழா கூட்டத்தில் கார் புகுந்து 3 பேர் காயம்: மத்திய பிரதேசத்தில் சம்பவம்

துர்கா பூஜை விழா கூட்டத்தில் கார் தாறுமாறாக ஓடி மோதியதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் இரவு துர்கா பூஜை விழா நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த துர்கை அம்மன் சிலைகளை கரைக்க நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

இந்த ஊர்வலம் ரயில் நிலையில் அருகிலுள்ள சாலையில் சென்ற போது வேகமாக வந்த கார் ஒன்று, அங்கு கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது மோதியது. இதில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர்

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மக்கள் காரை அடித்து நொறுக்க முயன்றனர்.

அதற்குள் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 16 வயது சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போபால் போலீஸ் டிஜஜி இர்ஷாத் வாலி தெரிவித்தார்.

இதேபோன்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 16 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x