கடந்த 220 நாட்களில் இல்லாத அளவு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் குறைந்தனர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


இந்தியாவில் 220 நாட்களில் இல்லாத அளவில் கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14ஆயிரத்து 146 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 229 நாட்களில் இல்லாத அளவுக்கு முதல்முறைாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 40 லட்சத்து 67ஆயிரத்து 719 ஆகஅதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.10 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 846 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 5,786 பேர் குறைந்துள்ளனர். கடந்த 220 நாட்களில் இல்லாத அளவுக்கு கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 52ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 59 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரத்து 381 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 11 லட்சத்து 113 பரிசோதனைகள் கடந்த 24 மணிநேரத்தில் செய்யப்பட்டுள்ளன.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 719 ஆகஉயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவரை 97.65 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in