Published : 27 Mar 2016 02:11 PM
Last Updated : 27 Mar 2016 02:11 PM
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் ஒரு போதும் கைகோர்க்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதாக கூறப் படுகிறது. எனினும் தனித்தனியாக இருகட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று செய்தி யாளர்களிடம் மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி கூறியதாவது:
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸுடன் ஒருபோதும் கைகோர்க்க கூடாது என எங்கள் கட்சி மேலிடம் முடிவு எடுத்துள்ளது. காங்கிரஸுடன் இணையப் போவதும் இல்லை; கூட்டணி அமைக்கப் போவதும் இல்லை.
பிரதமர் மோடியின் ஆட்சி யில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. விவசாயி களிடம் இருந்து வேளாண் பொருட்களை தனியார் நிறுவனங்கள் நேரடியாக வாங்கிக் கொள்வ தற்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது. இதனால் விவசாயி களின் வாழ்க்கை இருண்டுவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளும் தலைவிரித்தாடுகின்றன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத் துக்கான நிதியையும் மத்திய அரசு கணிசமாக குறைத்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT