நாடாளுமன்றத் துளிகள்: தேர்தலுக்கு சிறப்பு ரயில்

நாடாளுமன்றத் துளிகள்: தேர்தலுக்கு சிறப்பு ரயில்
Updated on
1 min read

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள், அமைச்சர்களின் பதில்கள் உள்ளிட்டவற்றின் சுருக்கமான விவரம் வருமாறு:

எல்லையில் அத்துமீறல் - உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 2015-ம் ஆண்டு 405 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 16 பொதுமக்கள் இறந்துள்ளனர். 71 பேர் காயமடைந்துள்ளனர். 72 வீடுகள் சேதமடைந்துள்ளன.

தேர்தலுக்கு சிறப்பு ரயில் - ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா:

உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. விழாக்காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கும் திட்டத்தின் கீழ், தேர்தலின்போதும் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஐஎஸ் தொடர்புடைய 24 பேர் கைது: உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:

ஐஎஸ் தொடர்புடையவர்கள் சிலர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் உள்ளூர் போலீஸார் சில மாநிலங்கில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை என்ஐஏ ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in