Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதுவரை 94 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. டிசம்பர் மாத இறுதிக்குள்ளாக 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி விட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் இலக்கு நிர்ணயித்திருந்தது.
இதுகுறித்து நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா, தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், அடுத்த சில தினங்களுக்குள் 100 கோடி கரோனா தடுப்பூசி இலக்கை அடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT