Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

அருணாச்சல பிரதேச எல்லையில் அத்துமீறிய 200 சீன வீரர்கள் தடுத்து நிறுத்தம்

இந்தியாவின் லடாக்கின் காராகோரத்தில் இருந்து வடகிழக்கின் அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய - சீன எல்லைப் பகுதி நீள்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் கால எல்லைக் கோட்டை சீனா ஏற்க மறுப்பதால் லடாக், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறுவதும் அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த சூழலில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சுமார் 200 சீன வீரர்கள் இந்திய எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு நாடுகளின் வீரர்களும் சில மணி நேரம் ஆயுதமின்றி மோதிக் கொண்டனர். இறுதியில் இந்திய வீரர்கள், சீன வீரர்களை விரட்டியடித்தனர். சில சீன வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் எழுந்தது. இருநாடுகளின் பிராந்திய தளபதிகள் அவசர ஆலோசனை நடத்தியதால் சிறிது பதற்றம் தணிந்தது. அடுத்த சில நாட்களுக்கு ராணுவரீதியான பேச்சுவார்த்தை தொடரும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x