Last Updated : 06 Oct, 2021 10:02 AM

 

Published : 06 Oct 2021 10:02 AM
Last Updated : 06 Oct 2021 10:02 AM

இந்தியாவில் புதிதாக மேலும் 18,833 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 278 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக மேலும் 18,833 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 8850 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 18,833

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,38,71,881

இதுவரை குணமடைந்தோர்: 3,31,75,656

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 24,770.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 278.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,49,538

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,46,687. இது கடந்த 203 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 91,54,65,826 கோடி தவணை கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 72,51,419 தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x