இந்தியாவில் கடந்த 209 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா பாதிப்பு குறைவு: 18,346 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 209 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா பாதிப்பு குறைவு: 18,346 பேருக்கு தொற்று உறுதி
Updated on
1 min read

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 209 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் 18,346 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 8,850 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுபோலவே நேற்று ஒரே நாளில் 180 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 149 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,52,902 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 18,346

இதுவரை குணமடைந்தோர்: 3,31,50,886

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 29,639.

கரோனா உயிரிழப்புகள்: 4,49,260

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 263

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,52,902

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 91.54 கோடி பேர்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in