Last Updated : 04 Oct, 2021 09:51 AM

 

Published : 04 Oct 2021 09:51 AM
Last Updated : 04 Oct 2021 09:51 AM

இந்தியாவில் புதிதாக 20,799 பேருக்கு கரோனா உறுதி: 100 கோடியை நெருங்கும் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 20,799 ஆக பதிவாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 12,297 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுபோலவே நேற்று ஒரே நாளில் 180 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,64,458 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 20,799

இதுவரை குணமடைந்தோர்: 3,31,21,247

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 26,718

கரோனா உயிரிழப்புகள்: 4,48,997

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 180

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,64,458

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 90,79,32,861

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x