கரோனா தினசரி பாதிப்பு 22,842; கேரளாவில் மட்டும் 13,217 பேருக்கு பாதிப்பு

கரோனா தினசரி பாதிப்பு 22,842; கேரளாவில் மட்டும் 13,217 பேருக்கு பாதிப்பு

Published on

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 22,842ஆக பதிவாகியுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 13,217 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுபோலவே நேற்று ஒரே நாளில் 244 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் அவர்களில் 121 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்ள் ஆவர்.

கடந்த 199 நாட்களில் இல்லாத அளவாக சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,70,557 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 22,842

இதுவரை குணமடைந்தோர்: 3,30,94,529

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 25,930

கரோனா உயிரிழப்புகள்: 4,48,817

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 244

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,70,557

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 90,51,75,348

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in